வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0
வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!
வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!
வெளிமாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானல் வரும் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் கட்டாயம்:

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தாக்கம் தமிழக மக்களை அச்சுறுத்தி வந்தது. நாடு முழுவதும் இ-பாஸ் முறை தொடங்கப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்து வரும் காரணத்தால் இ-பாஸ் முறை படிப்படியாக தளர்த்தப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பரவி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இதனை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே அனைத்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் முறை கட்டாயம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ‘பரிக்ஷா பெ சர்ச்சா’ கலந்துரையாடல் – 8.68 லட்சம் மாணவர்கள் பதிவு!!

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது. அதில் 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ய உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இங்கு இ-பாஸ் பரிசோதனை செய்து மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

TNEB 600 உதவி பொறியாளர் பணியிடங்கள் – தேர்வு தேதியை மாற்ற பரிசீலனை!!

மேலும் அவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவர்கள் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் அரசு விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் – ஏப்ரல் 17 முதல் தொடக்கம்!!

மேலும் கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் வரும் வாகனங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபடுத்தப்பட வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் போதிய எண்ணிக்கையில் இல்லாத காரணத்தால் சரியாக பரிசோதனைகள் செய்ய முடியாத நிலை உள்ளதாக சுகாதாரத் துறையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!