தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தீவிரமடையும் கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் 50 சதவிகிதத்திற்கு மேல் பரவி உள்ள 5 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,681 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனாலும் வைரஸ் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா 5 முக்கிய மாவட்டங்களில் அதிகம் பரவியதே வீரியம் அதிகரித்ததற்கு காரணமாகும்.
TN Job “FB Group” Join Now
சென்னை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. சென்னை – 3,750, கோவை – 715, செங்கல்பட்டு – 947, திருவள்ளூர் – 529, மதுரை – 462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு – கல்வியாளர்கள் வேதனை!!
இந்த 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அரசு தெரிவித்த கட்டுப்பாடு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.