தமிழகத்தில் கொரோனா இறப்பு வீதம் குறைவு – மாநகராட்சி ஆணையர் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் 16 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் அளித்துள்ளார்.
இறப்பு வீதம்:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நோய் தொற்றினால் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தவிர மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேஷ், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகளவு காணப்படுகிறது. மஹாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகளவு புதிய பாதிப்புகளோடு இறப்பு எண்ணிக்கையும் பதிவு செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
கொரோனா நோய் தாக்கம் காணமாக இறப்பு சம்பவங்கள் ஏற்பட்டாலும், மறு பக்கத்தில் ஆச்சிஜன் குறைபாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா முதலாம் அலையை காட்டிலும் இரண்டாம் அலை மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும்போது, ‘தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையை பொறுத்தளவு கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக குறைந்துள்ளது. தவிர மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவசர ஊர்திகள் மருத்துவமனையில் காத்து கிடக்கும் நிலை தவிர்க்கப்படும்’.