தமிழக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அரசு ஊழியர்களே – நீதிமன்றம் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக கருதப்படுவார்கள் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு:
தமிழக அரசு சார்பில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாய நகை கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 2016 ஆம் ஆண்டு நகை ஒன்றை அடமானம் வைத்து ரூ.60 ஆயிரம் ரொக்கம் கடனாக வேளாண் கடன் சங்கம் மூலமாக பெற்றார். தற்போது அரசின் இந்த உத்தரவு காரணமாக தனது நகையை திருப்பி தருமாறு வங்கியில் கோரிக்கை வைத்தார்.
TN Job “FB Group” Join Now
ஆனால் அவரது நகையை தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியதால் கூட்டுறவு சங்க செயலாளர் சுப்பிரமணியத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அரசு நிதியுதவி பெறாத கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அரசு ஊழியர்கள் இல்லை என வழக்கறிஞ்ஞர் வாதிட்டார்.
தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம் – அதிகரிக்கும் வெயில்!!
மேலும் அரசு நிதியுதவி பெரும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக கருதப்படுவார்கள். அரசு வழங்கும் நிதியுதவி பெறாத கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அரசு ஊழியர்களாக கருத்தப்பட மாட்டார்கள் என தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்த மறு ஆய்வு மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் உயர்நீதிமன்றம் பட்டியலிட வேண்டும் என்றனர்.