தமிழகத்தில் முழு ஊரடங்கில் ‘இவர்கள்’ வெளியில் செல்ல அனுமதி – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தோலை தொடர்பு ஊழியர்கள் பனி நிமித்தமாக தங்களது வாகனங்களில் வெளியில் பயணிக்கலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு அனுமதி:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் அத்தியாவசிய துறைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மேலும், தொற்று தீவிரமடைந்து வருவதால் தளர்வுகளற்ற ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!
மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், மருந்தாளுனர்கள் போன்ற பணியினர் ஊரடங்கு காலத்தில் பணி நிமித்தமாக வெளியில் சென்று வர அரசு அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக இங்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
கன்னியாகுமரி மாவட்டதைச் சேர்ந்த காணாமல் போன 16 மீனவர்களை கண்டுபிடிக்க தமிழக முதல்வர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கோரிக்கையை ஏற்று, ஊரடங்கு காலத்தில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், தனியார் தொலைத்தொடர்பு ஊழியர்கள் பணி நிமித்தமாக தங்களது வாகனங்களில் வெளியில் செல்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அவர்கள் தங்களது அடையாள அட்டையினை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.