தமிழகத்தில் பத்திர பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் – முதன்மை செயலர் உத்தரவு!!
தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் நடைபெறும் பத்திரப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் கட்டணம்:
தமிழகத்தில் மங்களகரமான நாட்களாக கருதப்படும் சித்திரை முதல்நாள் மற்றும் ஆடிப்பெருக்கு நாட்களின் போது புதிதாக நிலம் வாங்குதல், பத்திரப்பதிவு போன்றவற்றை செய்வார்கள். அந்த நாட்களின் அரசு விடுமுறை என்பதால் பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படாது. எனவே பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில் அந்த தினங்களில் பத்திரப்பதிவு துறை அலுவலகங்களை திறந்து வைத்து,
TN Job “FB Group” Join Now
மங்களகரமான நாட்களில் புதிய சொத்துக்களை பதிவு செய்ய வருபவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிக்கையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி (14.04.2021) மற்றும் ஆடிப்பெருக்கு (3.08.2021) மற்றும் தைப்பூசம் (18.01.2022) ஆகிய நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பதிவு பொதுமக்களால் சொத்து பரிமாற்றம் குறித்த,
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் கோரிக்கை!!
ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்திட எதுவாக இருக்கும், என்றும் அத்தகைய தினங்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திடவும் அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு பதிவு சட்டத்தின் கீழ் உள்ள Table Fees இல் கூறப்பட்டவாறு கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு கோரப்பட்டதன் அடிப்படையில் தங்களின் கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து அந்த நாட்களில் பத்திரம் பதிவு செய்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.