தமிழகத்தில் வருகிற 8 ஆம் தேதி உருவாகிறது “மாண்டஸ் புயல்” – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

0
தமிழகத்தில் வருகிற 8 ஆம் தேதி உருவாகிறது
தமிழகத்தில் வருகிற 8 ஆம் தேதி உருவாகிறது "மாண்டஸ் புயல்" - மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் வருகிற 8 ஆம் தேதி உருவாகிறது “மாண்டஸ் புயல்” – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது பருவமழை சற்று குறைந்து இருக்கிறது. இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 8 ஆம் தேதி மாண்டஸ் புயல் உருவாக இருக்கிறது. அதனால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் தற்போது பருவமழை தாக்கம் குறைந்துள்ள நிலையில், வருகிற 8 ஆம் தேதி வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் எனவும் அது வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதியில் நீடிக்கும் மெல்லிய காற்று சுழற்சி மற்றும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து அந்தமான் கடல் பகுதிக்கு வந்துள்ள காற்றுசுழற்சி ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று (டிச.4) மழை பெய்தது. இந்நிலையில் அந்தமான் பகுதிக்கு வந்துள்ள காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 7ம் தேதி ஆழ்ந்த காற்றழுத் தாழ்வு மண்டலமாகவும் மாறி அதன் பின் புயலாக மாற இருக்கிறது.

தமிழகத்தில் புது பொலிவு பெறும் ரேஷன் கடைகள் – அதிகாரி வெளியிட்ட சூப்பரான தகவல்!!

Exams Daily Mobile App Download

அந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஆகிய பகுதிகளில் 8ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!