‘தடுப்பூசி செலுத்தாவிட்டால் கட்டாய விடுப்பு’ – தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பதற்கான வழிமுறைகள்!
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி கட்டாயம்:
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் கொரோனாவின் உருமாறிய “டெல்டா வைரஸ்” இன் இரண்டாம் அலை பரவலால் மாநிலம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இதனை அடுத்து வைரஸ் பரவல் என்பது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் புதிய வசதி – பதிவுத்துறை ஜிஜி அறிவிப்பு!!
இதனை அடுத்து சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட கூடுதல் தளர்வுகளில், வைரஸ் தாக்கம் ஒரளவு குறைந்துள்ளதால் கடந்த பல மாதங்களாக திறக்காமல் உள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. மேலும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படாமல் இருந்தன. மற்ற மாணவர்களுக்கு மட்டுமே இணைய வழி வகுப்புகளை நடத்தி வந்தனர்.
Tokyo Paralympics 2020 India Full Schedule: இந்திய வீரர்களின் போட்டி அட்டவணை வெளியீடு!
தற்போது கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்பட்டு வகுப்புகளை நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதோர் கட்டாய விடுப்பில் வீட்டிற்கு அனுப்பப்படுவர் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து தடுப்பூசி செலுத்த விரும்புவோர்க்கு கல்லூரிகளில் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும், உடல் ஊனமுற்ற மாணவர்கள் கல்லூரிக்கு வருவது கட்டாயமில்லை எனவும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.