தமிழக கலெக்டர் ஆபீஸில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – இறுதி வாய்ப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் நீதி குழுமத்தில் Social worker Member பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் Social worker Member பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிபோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் Child Psychology, Psychiatry, Sociology/ Law பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் குழந்தைகள் மேம்பாட்டு பணிகளில் 07 ஆண்டுகள் வரை அனுபவம்/ ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும்.
- பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமையானவர்கள் வரும் 26.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,
அரசு. குழந்தைகள் இல்ல வளாகம்,
V.O.C நகர்,
தஞ்சாவூர் 613 007.