அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து – முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி!!
தமிழகத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் பல நாட்களாக வலியுறுத்தப்பட்ட கோரிக்கை குறித்து தமிழக அரசு ஆணை ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு ஆணை:
அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியராகில் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் ஊதிய உயர்வு போன்றவை ரத்து செய்யப்பட்டது.
எனவே இந்த நடவடிக்கைகளை திரும்ப பெறக்கோரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல முறை கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத அரசை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட திட்டமிட்டனர். தற்போது தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
4 கோடி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகை – யூனியன் பட்ஜெட்!!
இதற்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து வருகின்றனர். இருந்த போதிலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் வைக்கப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறைபடுத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ந்நிலையில் வருகிற 20 ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த 10,000 ஆசிரியர்கள் திரண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்றது.
பிற மொழி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பு – தமிழக அரசிடம் கோரிக்கை!!
மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விடுமுறை காலத்தை பணிக்காலமாக கருதி அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்