மத்திய தொழிலக பாதுகாப்பு படை காலிப்பணியிடங்கள் – முன்னாள் படை வீரர்களுக்கு வாய்ப்பு!!
மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ படைவீரர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை:
மத்திய தொழில பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) தற்போது 1.8 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றன. இந்த வீரர்கள் நாட்டில் உள்ள 60 விமான நிலையங்கள், அணுசக்தி மையங்கள், முக்கிய அரசு கட்டிடங்கள், டெல்லி மெட்ரோ நிலையங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அவர்கள் பொதுவாக எழுத்துத் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால் தற்போது முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கான முன்னுரிமை அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் – புதிய திட்டம்!!
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி, “மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் காலியாக உள்ள சார்பு ஆய்வாளர்கள், உதவி சார்பு ஆய்வாளர்கள், தலைமை காவலர், காவலர் ஆகிய பணியிடங்களில், முன்னாள் ராணுவத்தில் சுபேதார், அவில்தார், ராணுவ வீரர் போன்ற பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் 71,766 பேருக்கு வேலைவாய்ப்பு – 66 ஒப்பந்த திட்டங்களுக்கு அனுமதி!!
இந்த பணிகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற தொழிலக பாதுகாப்பு படையில் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள 50 வயதிற்கு உட்பட்ட ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனுப்ப மார்ச் 15 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்’ – தமிழகத்தில் முழுவதுமாக அமல்!!
இதற்கான விண்ணப்பங்களை மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது முன்னாள் படை வீரர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்