தமிழக வழிபாட்டு தலங்களில் புதிய கட்டுப்பாடுகள் – தலைமை செயலர் இன்று ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வழிபாட்டு தலங்களில் விதிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் மத தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமை செயலர் ஆலோசனை:
தமிழகம் முழுவதும் இம்மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி 10 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரைகள் மூடல் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட உள்ளது. பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகளில் மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 25 முதல் கோடை விடுமுறை – தொடக்கக்கல்வி இயக்குனரிடம் கோரிக்கை!!
இதில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பின்பற்றுவது அல்லது வழிபாட்டு தலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அரசின் கட்டுப்பாடுகளால் மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இந்த வருடமும் தடைபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.