தமிழகத்தில் இறப்பு & வாரிசு சான்றிதழ் வழங்கல் – தலைமை செயலர் முக்கிய உத்தரவு!
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழை பெறுவதில் பல சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இறப்பு சான்றிதழ்:
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த 24 மணிநேர நிலவரப்படி 2,677 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு – வங்கியாளா்கள் குழுமம் அறிவிப்பு!!
இதனால் தான் தற்போது கொரோனா ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர் என்றே சொல்லலாம். அதாவது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வாங்குவதை பற்றிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார்.
பிற்பகல் 3 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி – ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
அதாவது இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர் கையூட்டு வாங்குவது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே இந்த மாதிரியான புகார்கள் அரசுக்கு சென்றுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.