பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து – பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

0
பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து - பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு
பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து - பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து – பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனவே கல்லூரி முதற்கொண்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தொற்றின் தாக்கம் குறையாததினால் தேர்வுகள் எல்லாம் தள்ளி வைக்கப்படும், ரத்து செய்ய பட்டும் வருகின்றது.

இந்நிலையில் திருவாரூர் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதி கட்டிடம் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்லைக்கழகம் தொடர்ச்சியாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதிக்குள் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு முந்தைய பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிசையாக ஒவ்வொரு தேர்வுகளாக ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் புதிதாக இந்த பட்டியலில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!