தமிழகத்தில் ஜூன் 21 முதல் பேருந்துகள் இயங்க அனுமதி? முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் நாளை (ஜூன் 21) முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பேருந்து போக்குவரத்து:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல்முறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆட்டோ, டாக்சி, பேருந்து போன்ற போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து குறைவாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஜூன் 14ம் தேதி முதல் புதிய தளர்வாக ஆட்டோ மற்றும் டாக்சி குறைந்த பயணிகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
ஜூன் 21ம் தேதி முதல் 16 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
இதை அடுத்து தமிழகத்தில் நாளை (ஜூன் 21) காலை 6 மணி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் புதிய தளர்வாக மாவட்டங்களுக்குள் அல்லது மண்டல வாரியாக பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் பேருந்து இயக்கம் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
ஜூன் 28 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் உள்ள பணிமனைகளில் பேருந்து சுத்தம் செய்யும் பராமரிப்பு பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 10 பணிமனைகளில் உள்ள சுமார் 500 பேருந்துகளில் முகப்பு விளக்குகள், சக்கரங்கள், எஞ்ஜின், பிரேக், ஆக்சி லேட்டர் மற்றும் இயந்திரவியல் தொடர்பான அனைத்து பாகங்களும் சரியாக செயல்படுகிறதா என தொழில் நுட்பவியலாளர்கள் மூலம் சரி பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறுகையில், நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படலாம். எனவே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.