தமிழகத்தில் மே 5 ஆம் தேதி முழு கடையடைப்பு? வணிகர் சங்கத்தினர் விளக்கம்!
ஆண்டுதோறும் மே 5 ஆம் தேதி வணிகர் தின நாளில் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என வணிகர் பேரமைப்பு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் வணிகர்கள் நாள் விழா மாலை நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது.
வணிகர்கள் நாள் :
ஆண்டு தோறும் மே 5 ம் தேதி வணிகர் தின நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நிகழ்ச்சிகள் நடைபெறும். கடைகளுக்கு வணிகர்கள் விடுமுறை அளிப்பர். சென்னை ராமசாமி தெருவில் உள்ள வணிக பேரமைப்பிற்கு சொந்தமான வளாகத்தில் விழா நடைபெறும். அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வியாபாரம் முடங்கியுள்ளது. வணிகர்களின் நிலையும் மோசமாக உள்ளது. இதனை கருத்திற்கொண்டு வணிகர்கள் நாள் புதன் கிழமை அன்று விடுமுறை கிடையாது என வணிகர்கள் பேரமைப்பு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா கடிதம் – ஆளுநரிடம் சமர்ப்பிப்பு!!
அதற்கு பதிலாக அன்று கடைகளுக்கு விடுமுறை அளிக்காமல் அன்று நடைபெறும் விழாக்கள் மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர். சென்னை மண்டல தலைவர் கே ஜோதி லிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெறும் எனவும் மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். மேலும் விழாவானது கொரோனா தடுப்பு பணிகளை கருத்திற்கொண்டும் விதிமுறைகளை பின்பற்றியும் நடைபெறும் என வணிகர்கள் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா தெரிவித்துள்ளள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்