தமிழக வங்கிகளில் வேலை நிறுத்த போராட்டம் – மார்ச் 15 &16 தேதிகளில் அறிவிப்பு!!
தமிழகத்தில் உள்ள இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் காரணமாக வங்கி ஊழியர்கள் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகள்:
மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையின் போது இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கபடுவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்கு வங்கி ஊழியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வங்கிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மத்திய அரசு தொழிலாளர் துறை கூடுதல் தலைமை ஆணையர் எஸ்.சி.ஜோஷியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
TN Job “FB Group” Join Now
இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு தனது முடிவை பரிசீலனை செய்தால் தாங்கள் அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்தை பரிசீலனை செய்யலாம் என தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கு குறித்து அரசு எந்த பதிலும் அளிக்காத காரணத்தால் வங்கி ஊழியர்கள் மார்ச் 15, 16 ஆம் தேதிகளில் கட்டாயம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி – தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!!
இந்நிலையில் வருகிற சனிக்கிழமை, ஞாயிறு கிழமைகளை தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை என 4 நாட்கள் வங்கிகள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பணம், காசோலை, பணவர்தனை உள்ளிட்ட அனைத்து விதமான வங்கி சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. அதே வேளையில் தனியார் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.