தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு!!

0
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு!!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு!!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு!!

தமிழகத்தில் மார்ச் 31ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், ஏப்ரல் மாதம் நீட்டிக்கப்பட உள்ள பொதுமுடக்கத்தில் கூடுதலாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு:

உலகம் முழுவதும் 2019 டிசம்பர் மாதம் கொரோனா பரவல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் 2020 மார்ச் மாதத்தில் வைரஸ் தொற்றின் அச்சம் காரணமாக முதன்முதலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்திலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு ஆலோசனை!!

இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும் கொரோனா தொற்று பரவல் சிறிது சிறிதாக குறையத் தொடங்கியது. இதனையடுத்து ஊரடனைகள் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி, 100 சதவீத பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயக்கம், வழிபாட்டுத் தலங்கள், தியேட்டர்கள் திறப்பு என அடுக்கடுக்காக தளர்வுகள் வழங்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இதனால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை மறந்து விட்டனர் என்றே கூறலாம். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவத் தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டைப்போல தினசரி 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – பெற்றோர்கள் கோரிக்கை!!

இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவானது வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பு உள்ள தெருக்கள், வீடுகளில் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அறிவிப்பு – EPFO இணையதளம் மூலம் தகவல்கள்!!

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நீட்டிக்கப்பட உள்ள ஊரடங்கில் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அது தொடர்பாக அரசு யோசித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!