தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!!

0
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 12ம் வகுப்பு தவிர்த்து பிற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் கொரோனா வைரஸ் 2வது அலை பரவத் தொடங்கி உள்ளது. இதனையொட்டி மீண்டும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

பிற வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. CBSE, ICSE ஆகிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இதற்கிடையில் நாளை (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் தமிழகத்திலும் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் நாளை ஆலோசனை!

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை நேரடி மற்றும் ஆன்லைன் உட்பட அனைத்து வகையான வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான உத்தரவினை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!