தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலர் பதில்!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு என சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அவர் எச்சரித்து உள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
அவர் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தமிழகத்தின் 3 மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இதனால் தொய்வு ஏற்பட்ட நோய் கட்டுப்பாட்டு பணிகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனாவுக்கு உரிய மருந்து இல்லாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது மருத்துவ வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு மீண்டும் அமல்படுத்த வாய்ப்பில்லை என தெரிவித்த அவர், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றார். மேலும் இதனால் அத்தியாவசிய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்