தமிழகத்தில் புத்தாண்டு, பொங்கலுக்கு புதிய திட்டம் – ஆவின் நிறுவனத்தின் சிறப்பு வகை இனிப்புகள்!
தமிழகத்தில் இனி வரும் நாட்களில் புத்தாண்டு, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வர இருக்கும் நிலையில், புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் திட்டம்:
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் முன்னணி பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டுமின்றி, 200க்கும் மேற்பட்ட பால் சம்மந்தப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிதாக 10 பொருள்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. ஆவின் நிறுவனத்தின் பால்கோவா, நெய், வெண்ணெய், குல்பி போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பொருள்களாக இருக்கின்றன.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் விற்பனை முடிவில் 116 கோடி ரூபாய் வருவாய் வந்தது. இந்த ஆண்டு தீபாவளியில் இலவச இனிப்புகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதால் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வருகிறது.
தமிழகத்தில் இன்று (நவம்பர் 14) விடுமுறை விடப்பட்ட பள்ளிகளின் விவரம் – மாணவர்கள் கவனத்திற்கு..!
Exams Daily Mobile App Download
அதனால் ஆவின் நிறுவனம் சார்பில் இனிப்புகள் விற்பனை செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்ந்து இருப்பதால் பால் விற்பனை குறைந்து பால் பவுடர், வெண்ணெய், நெய் தயாரிப்பு அதிகரித்துள்ளது. அதனால் பண்டிகை காலங்களில் சிறப்பு வகை இனிப்புகள் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.