தமிழகத்தில் 70 சதவீத பேருக்கு டெல்டா கொரோனா வைரஸ் பாதிப்பு – ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் சுமார் 70% பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கொரோனா:
தமிழகத்தில் சுமார் நான்கு மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து மக்களை அதிக அளவில் தாக்கி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் பரவிய கொரோனா முதல் அலையில் ஏற்பட்ட உயிர் சேதத்தை விட தற்போது பரவும் கொரோனா இரண்டாவது அலையில் ஏற்படும் உயிர் சேதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள மக்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம்? மத்திய அரசு விளக்கம்!
மேலும் தமிழகத்தில் இரண்டாவது அலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டதற்கு டெல்டா வகை (B.1.617.2) வைரஸ் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் சுமார் 70% பேர் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா பாதிக்கபட்ட 554 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 70% பேருக்கு டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மறு செமஸ்டர் தேர்வு – நாளை முதல் தொடக்கம்!!
அதன்படி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 18.9% பேர் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13-17 வயது வரை உள்ள இளம்பருவத்தினரில் 3.4% பேரும், 18-44 வயது வரை உள்ள இளைஞர்களின் 46.1% பேரும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 31.6% பேரும் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சுகாதாரத்துறை தெரிவித்த இந்த தகவலினால் மக்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.