தமிழகத்தின் 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? தலைமை செயலர் இன்று ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமை செயலர் ஆலோசனை:
தமிழகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் 98 பேர் உயிரிழந்து உள்ளனர். நாள்தோறும் தொற்று, பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. எனவே அந்த மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இன்று காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு? இன்று முக்கிய அறிவிப்பு!
அதில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது அல்லது கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்து அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் திருமணம், இறுதிச் சடங்கு போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்வுகளில் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் இருப்பதால் கொரோனா பரவல் அதிகரிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.