தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!

0
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - கனமழை எதிரொலி!
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - கனமழை எதிரொலி!
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!

தமிழகத்தில் நேற்று முதல் பல மாவட்டங்களிலும் கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இடைவிடாத கனமழை:

வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று முன்னதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த வாரத்தில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன்னதாக கரையை கடந்துள்ள நிலையில், தற்போது புதிய வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளது. தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில நீடிக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு!

அதன்படி, நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாணவர்களின் நலன் கருதியும் தமிழகத்தின் 27 மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 26ம் தேதியான இன்று விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாமக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அமிர்தா குடும்பத்திற்கு ட்ரெஸ் வாங்கி தரும் எழில், வெடி வெடிக்க கோபியை எதிர்பார்க்கும் மயூரா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மேலும், சென்னை, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம் போன்ற 19 மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நவம்பர் 26ம் தேதியான இன்று மற்றும் நவம்பர் 27ம் தேதியான நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு முன்னதாக அறிவித்துள்ள படி, இந்த கனமழை காரணமாக அளிக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களை கூடுதல் வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் மூலம் ஈடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!