தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பிக்க இன்று (ஜூன் 7) கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ஆம் ஆண்டில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக மாணவர்களுக்கு உதவிட மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கான ரூ.1000 உரிமைத்தொகை எப்படி வழங்கப்படும்? – முக்கிய தகவல் வெளியீடு!
இந்நிலையில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதனை பதிவேற்றம் செய்ய தங்களது அசல் ஆவணங்களான மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கேட்பதற்கான சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இந்த படிப்பில் சீரம் மாணவர்களுக்கு மாதம் ரூ. 750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், பாட புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்க்கூலி, வரைபடக்கருவி, இலவச பஸ்பாஸ் போன்றவை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே ( ஜூன் 7) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.