தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (டிச.8) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மண்டாஸ் புயல் எதிரொலி!
தமிழகத்தில் வங்க கடலில் உருவாக உள்ள மாண்டஸ் புயல் காரணமாக இன்று (டிச. 8) பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 700 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கில் நகர்ந்து “மண்டாஸ்” புயலாக மாறி இருக்கிறது. இந்நிலையில் தமிழத்தில் இன்று முதல் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் காரணமாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் கனமழை முன்னெச்சரிக்கையாக திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று (டிச. 8) திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.