தமிழகத்தில் திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள்- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான பயிற்சி வகுப்புகள் நாளை (ஏப்ரல் 15) முதல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
செய்முறை தேர்வுகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதன் பின்னர் கொரோனா குறைந்த காரணத்தினால் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் திறந்து 2 மாதங்களில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனால் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக வழக்கம் போல் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 3 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுகள் வாக்கு எண்ணிக்கை காரணமாக மே மாதம் 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறையும் – அரசு முக்கிய அறிவிப்பு!!
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நாளை முதல் கட்டாயம் தொடங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வகங்கள் அனைத்தும் தயாரான நிலையில் உள்ளது. எனவே செய்முறை தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.