தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை – விரைவில் அறிவிப்பு!!
தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 6 நாட்களுக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாள்தோறும் 2000க்கும் மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கல்லூரிகளுக்கும் விடுப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மே 3ம் தேதி பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!
எனவே 12ம் வகுப்பிற்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. பதிவு செய்யப்பட்டு வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாளே பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் தற்காலிகமாக அது ஒத்திவைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் 6 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. நாளை (ஏப்ரல் 2) புனித வெள்ளி, அடுத்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை ஆகும். அதன் பின்னர் ஏப்ரல் 5ம் தேதி பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல உள்ளனர். ஏப்ரல் 6 வாக்குப்பதிவு நடைபெறுவதால் பொது விடுமுறை. எனவே அடுத்தடுத்து 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூரவ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.