தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர்கள் வேண்டுகோள்!!

6
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - ஆசிரியர்கள் வேண்டுகோள்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - ஆசிரியர்கள் வேண்டுகோள்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர்கள் வேண்டுகோள்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர்கள் வேண்டுகோள்:

தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 9 முதல் 11ம் வகுப்பு வரை நடப்பு கல்வியாண்டிலும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். அதன் பின்னர் கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து 12ம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் – தேர்தல் முடிவுக்கு பின் நடத்த திட்டம்!!

மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறுவதால் அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாள்தோறும் 3000க்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் ஏப்ரல் 10ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

தற்போது 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. செய்முறைத் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய பல்கலை மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – ஜூன் மாதம் நடத்த ஏற்பாடு!!

பள்ளி மாணவர்கள் காலையில் வரும் பொழுது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி வருவார்களா? மாலையில் வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது அதனை பின்பற்றுவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். எனவே மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என கோரி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!