தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!
CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியான பிறகு, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
CBSE பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் நடத்தப்பட இருந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி அறிமுகம் – தன்னார்வலர்களுக்கு நிம்மதி!!
அதேபோல் மே 4 ஆம் தேதி அன்று CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வுகளையும் ஒத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வுகளை மீண்டுமாக நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் CBSE மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுவதை பொறுத்து, தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்பு ஜூன் 2 ஆம் தேதிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.