தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்கான பொதுத் தேர்வு இன்று முடிவடைகிறது. இதற்கான முடிவுகள்அடுத்த மாதம் ஜூன் 23ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தொடங்கி பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8.85 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதில் 32 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே இறுதியில் முடிவடைகிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆதாருடன் இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்!
இதில் குறிப்பிட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், பொருளியல் மற்றும் புள்ளியியல் உட்பட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்து விட்டன. இந்நிலையில் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெற்று முடிவடைகிறது. எனவே மே 28 ஆம் தேதி தொழிற்படிப்பிற்கான தேர்வுகள் மட்டும் நடைபெறவுள்ளது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வருகிற 28ம் தேதி அனுப்புவதற்கான பணிகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விடைத்தாள்களை திருத்துவதற்காக 40 மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், இப்பணிக்காக சுமார் 20 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.