தமிழகத்தில் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு – நாளை முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்வுகள் நடைபெற உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
செய்முறை தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி முறையில் பாடங்கள் எடுக்கப்பட்டன. தற்போது கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மீண்டுமாக பள்ளிகள் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வினை கருத்தில் கொண்டு வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? முக்கிய ஆலோசனை!!
ஏற்கனவே சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. கொரோனா நிலவரத்தில் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 16) முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கான ஆய்வக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்வு நடைபெற உள்ளதால் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள மாணவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மே 17 முதல் ஆன்லைனில் அரியர் தேர்வுகள் – தமிழக அரசு அறிவிப்பு!!
செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் வளாக பகுதிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தேர்வுகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.