தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் 100% சதவிகிதம் தேர்ச்சி – அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் 100% சதவிகிதம் தேர்ச்சி - அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் 100% சதவிகிதம் தேர்ச்சி - அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் 100% சதவிகிதம் தேர்ச்சி – அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் பாடங்களை விரைந்து நடத்தி முடித்து பயிற்சி தேர்வுகளை நடத்துமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் ஆல் பாஸ் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி முதல் மே மாதம் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தனியார் பள்ளிகள் பாடங்களை முடித்து திருப்புதல் தேர்வு நடத்தி வருகின்றன. ஆனால் அரசு பள்ளி மாணவர்களிடம் அந்த ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் பாடங்களை நடத்தி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 70% மாணவர்கள் நேரடி வகுப்பு மூலமாகவும் 20% மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் பாடங்களை கற்று வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கான சிறப்பு சலுகைகள் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இணைய வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பேசிய போது, “வழக்கமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக மே மாதம் நடைபெறுகிறது.

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!

வழக்கமாக திருப்பூர் மாவட்ட மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம் பிடிப்பார்கள். அதே போல இந்த ஆண்டும் திருப்பூர் மாவட்டத்தை முன்னணி மாவட்டமாக கொண்டு வர வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் அவர்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் – கல்வி அதிகாரிகள் உத்தரவு!!

கற்றல் திறனில் குறைவாக உள்ள மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் அதனை சரி செய்ய வேண்டும். அந்தந்த பாட ஆசிரியர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும், நுாறு சதவீத தேர்ச்சியை இலக்காக கொண்டு தீவிரமாக செயல்பட வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!