தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான சாத்தியக்கூறுகள் – அதிகாரிகள் ஆலோசனை!!
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடக்குமா? என்பதில் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறையும் வரையில் தேர்வுகள் நடத்துவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் ஒத்தி வைக்கப்பட்ட +2 பொதுத்தேர்வுகளை மீண்டுமாக நடத்துவது குறித்து தற்போது பதவியேற்று உள்ள புதிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறையின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – முதல்வர் சொல்வது என்ன?
ஆனால் கண்டிப்பாக தேர்வுகள் மீண்டும் நடத்தப்படுமா? என்பது குறித்த எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறையும் வரையில் பொதுத்தேர்வுகள் நடத்துவது சாத்தியமில்லை என கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் உயர் கல்வியை பாதிக்காத வகையில், தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தவிர மாணவர்களுக்கான +2 பொதுத்தேர்வுகளை ஆன்லைன் வழியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் அரசு பள்ளியில் பயிலும் பல மாணவர்களுக்கு போதிய இணையதள வசதி இல்லாத காரணத்தால் இந்த முயற்சி கைவிடப்பட்டது. கூடுதலாக +2 பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வேலைகள் ஓரளவுக்கு முடிந்ததாகவும், இன்னும் சில வேலைகள் மாத்திரம் மீதி இருப்பதாகவும் DGE தெரிவித்துள்ளது.