தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை முடிவு!!
தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் சிறப்பு நுழைவுத்தேர்வின் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியான நிலையில், 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மதிப்பெண் கணக்கீடு முறைகளும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்தான போது, அவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களை வைத்து 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை இதில் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா காரணமாக மிக தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வருகைப் பதிவிடும் கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டது.
மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தற்போது வரை ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண் கணக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் அடுத்த கல்வியாண்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு நுழைவுத்தேர்வினை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டும் இதில் கலந்து கொள்ளலாம் எனவும், இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.