தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு இயக்ககம் வெளியீடு!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை அரசு தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் இணைவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துணைத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் குறைந்த பிறகு இந்த ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கான கால அட்டவணை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
மேலும் 2012ம் ஆண்டு பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதி அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர நினைப்பவர்களுக்கும் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், முதல் முறையாக 10ம் வகுப்பு தனித்தேர்வு எழுத நினைப்பவர்கள் மற்றும் 2012ம் ஆண்டு தேர்வு எழுதி அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாதவர்கள் தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூன் 27 முதல் ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
அத்துடன் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் சீட்டுடன் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சென்று அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதையடுத்து விண்ணப்ப படிவத்தை 2 நகல் எடுத்து மாவட்ட கல்வி அலுவலரிடம் வருகிற ஜூலை 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.