தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்யலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொதுத்தேர்வு ரத்து:

தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 19 முதல் 10, 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதுவரை பெரிதளவில் பள்ளிகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை அங்கீகாரம் – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி மே 3ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிளஸ் 2 மாணவர்களின் மேற்படிப்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத்தேர்வுகள் ஆகியவற்றை மனதில் வைத்து பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மறுபுறம் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 25ம் தேதி துணை ராணுவ பாதுகாப்பு படை தமிழகம் வர உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதனால் பள்ளிகள் வாக்குச்சாவடியாக மாற்றப்படும். மேலும் வாக்கு எண்ணிக்கை, புதிய ஆட்சி அமைவது என அடுத்தடுத்து பல்வேறு பணிகள் இருக்கும். இதற்கிடையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம். மேலும் தேர்தலுக்கு பின்பு தேர்வுகளை நடத்தினால், அடுத்த கல்வியாண்டு பாதிப்படையும்.

திருப்பூர் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 24 நடைபெறும்!!

எனவே கடந்த கல்வியாண்டை போல் இந்த வருடமும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை நடத்தாமல் ரத்து செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!