தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு – கல்வித்துறை விளக்கம்!!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
கல்வித்துறை விளக்கம்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பிற்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் எவ்வித தேர்வுகளும் நடத்தப்படவில்லை. மேலும் பள்ளிகளும் திறக்கப்படாத காரணத்தால் வருகைப்பதிவேடும் கிடையாது.
TN Job “FB Group” Join Now
இதனால் 10ம் வகுப்பிற்கு எவ்வாறு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும் என்பதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. அது குறித்து பள்ளிக் கல்வித்துறை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதற்கிடையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையும் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. குறைந்தபட்ச மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற விரும்பினால் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
குரூப் 1 விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவிறக்கம் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!!
ஏற்கனவே பொதுத்தேர்வுகளை அரசு ரத்து செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்போது இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உண்மையில்லாத தகவல்களை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளார்.