தமிழக தனித்தேர்வர்களுக்கான 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு மாவட்ட தேர்வுகள் துறை இயக்குனர் அவர்கள் சார்பில் முக்கிய அறிவுப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்கள்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித்தேர்வு மையம் மூலமாக எழுதியவர்கள் அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவகங்கை மாவட்ட அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குனர் தனலட்சுமி வெளியிட்ட அறிவிப்பின் படி,
TN Job “FB Group” Join Now
“கடந்த ஆண்டு 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை உள்ள தனித்தேர்வர்களுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு – நாளை வெளியீடு!!
தேர்வுத்துறைக்கான விதிமுறைகளின் படி, தேர்வுகள் முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆன பின்னும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாதவர்களின் சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும். எனவே 2014-2018, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள தனித்தேர்வர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவகங்களுக்கு நேரில் வர வேண்டும்.
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
அவ்வாறு வரும் போது ரூ.45 மதிப்புள்ள தபால் தலை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்துடன் தேர்வு கூட அனுமதி சீட்டின் நகலை இணைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Yes