தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம் – புதிய அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் வெளியான நிலையில், செய்முறை தேர்வு தேதிகளில் மாற்றம் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
செய்முறை தேர்வு:
தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியானது. அந்த வகையில் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற இருப்பதாகவும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
TN TET 2-ம் தாள் தேர்வு குறித்த வழிமுறைகள் – தேர்வர்கள் கவனத்திற்கு!!!
Follow our Instagram for more Latest Updates
அதே போல 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் குறித்த அறிவிப்பும் கல்வித்துறை வெளியிட்டது. அதன் படி செய்முறை தேர்வுகள் மார்ச் 6 ஆம் தேதி துவங்கி 10 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேதிகளில் மாற்றம் செய்ய இருப்பதாக கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும், 11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும், 10ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.