தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி – தொடக்கக் கல்வி இயக்குனர்!
மாணவர்கள் தேர்ச்சி:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி வழியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதும் மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு பள்ளிகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சரியான கல்வி வழங்கப்படவில்லை என்பது பலரை வருத்தம் அடைய வைக்ககூடியதாக இருந்தது. இந்த நிலையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை நேற்றுடன் (மே 31) முடிவடைந்து, இன்று (ஜூன் 1) முதல் வகுப்புகள் மீண்டுமாக துவங்கியுள்ளன. தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தேசிய நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு – மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!
அதாவது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள எந்த மாணவர்களையும் தேக்க நிலையில் வைக்க கூடாது எனவும் மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தேர்ச்சி அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிவிடவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் ஊரடங்கு முடிந்தவுடன் ஜூன் 7 ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்து.