விஜய் டிவியின் டாப் சீரியல்களின் நேர மாற்றம் அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
விஜய் டிவி சீரியல்கள்:
விஜய் டிவி சீரியல்கள் எல்லாமே புதுவிதமான கதையுடன் இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். TRPயில் போட்டி போடும் டாப் சீரியல்கள் பல இருந்தாலும் அதில் சிறிய கதாபாத்திரம் கூட மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர். சமீபத்தில் சினிமா நடிகர்களை விட சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் மன்றம் அமைக்கும் அளவிற்கு புகழை சீரியல்கள் தேடி கொடுக்கின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இளசுகளை கூட கவரும் அளவிற்கு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சில நேர மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி பிக்பாஸ் நிகழ்ச்சியால் சில சீரியல்கள் நிறுத்தப்பட்டது தற்போது அந்த சீரியல்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் நிறுத்தப்பட்ட செந்தூரப்பூவே சீரியல் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த சீரியல் இனிமேல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
டாக்டர் மீது காதலில் விழுந்த “பாக்கியலட்சுமி” இனியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதே போல அதோடு மதிய வேளையில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் இனி இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பு ஆகுமாம். இந்த நேர மாற்றம் காரணமாக சீரியல் பார்க்கும் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீரியலை பார்ப்பார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.