நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சின்னத்திரையில் மக்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவரான நடிகை ஜனனி அசோக்குமார் தற்போது புது சீரியலில் முக்கிய ரோலில் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை ஜனனி அசோக்குமார்:
சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமா நடிகர்களை போல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் விருப்பமான நடிகையாக இருப்பவர் ஜனனி அசோக்குமார். அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மாப்பிள்ளை என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அதன் பின் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.
பிக் பாஸ் செய்வது கொஞ்சம் கூட நியாயமே இல்லை.. ஆயிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
அதன் பின் சீரியலில் நடிக்காமல் இருந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிகாட்டினார். இந்நிலையில் அவர் பல மாதங்களாக புது சீரியல் எதிலும் கமிட் ஆகாமல் இருந்த நிலையில், மீண்டும் அவர் பிரபல சேனல் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது எந்த சேனல் என்ற தகவல் வெளியாகவில்லை. இருந்தாலும் அவர் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருப்பதால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.