சின்னத்திரை சீரியல் ஜோடிகளின் கல்யாண சீசன் – ஸ்பெஷல் தருணங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!
சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல ஜோடிகளும் சமீபத்தில் தங்கள் நிஜ வாழ்கை ஜோடிகளுடன் சேர்ந்துள்ளனர். இவர்களின் ஸ்பெஷல் தருணங்களில் எடுத்துள்ள போட்டோக்கள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
ஸ்பெஷல் தருணங்கள்:
தற்போது சின்னத்திரையில் கல்யாண சீசன் களைக்கட்டியுள்ளது. கடந்த மாதம் முதல் பிரபலமாக உள்ள பல சின்னத்திரை நட்சத்திரங்களும் சமீபத்தில் அடுத்தடுத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். அந்த சமயங்களில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் இணையம் முழுவதும் உலா வருகிறது. இதனால் சின்னத்திரை நட்சத்த்திரங்கள் மேலும் பிரபலமடைந்துள்ளனர். அவர்களின் வாழ்வின் முக்கிய தருணங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வினுஷாவிற்கு இன்று பிறந்தநாள் – குவியும் லைக்குகள்!
ஜீ தமிழில் பூவே பூச்சூடவா தொடரில் இவர்கள் இருவரும் பல ஆண்டுளாக இணைந்து நடித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வருடம் இவர்கள் தாங்கள் காதலிப்பதை வெளி உலகிற்கு அறிவித்தனர். இதனால் இவர்கள் வெளி இடங்களில் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் இவர்களின் திருமண நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ மிகவும் சிறப்பாக வந்ததாக பலரும் பாராட்டி வருகின்றனர். அடுத்ததாக, ஜீ தமிழ் செம்பருத்தி தொடரில் நடித்து வரும் ஷாபனாவும், விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ஆர்யனும் தங்கள் காதலை அறிவித்த சில மாதங்களிலேயே திடீரென்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை இணையத்தில் யாரும் பார்க்கவில்லை என்றால் தான் அதிசயம். அந்த அளவிற்கி இவர்களின் புகைப்படங்கள் ரசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியல் மூலமாக காதலிக்க தொடங்கியவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் அதன்பிறகு தற்போது விஜய் டிவியில் சீரியலில் நடித்து வருகின்றனர். இவர்களின் திருணம், மெஹந்தி வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. திருமணம் செய்து போட்டோஷூட் நடத்தியவர்கள் ஒரு புறம் இருக்க, விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் சின்னத்திரை நடிகைகளும் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
நடிகை சரண்யா துராடி, நண்பரும், தொழிலதிபருமான ராகுல் சுதர்ஷனை காதலித்து வருகிறார். சரண்யாவும் ராகுலும் நீருக்கடியில் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இது இந்தியாவிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சென்று எடுத்து என்று சரண்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த போட்டோக்கள் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது. நடிகை நக்ஷத்ரா நாகேஷ் தனது பள்ளி வயது முதல் காதலித்து வந்த ராகவ் என்பவரை கடந்த ஜனவரி மாதம் நிச்சயம் செய்து கொண்டார். அப்போதில் இருந்து அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி நட்சத்திரா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.