காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி – சக நடிகர்கள் வாழ்த்து!
தமிழ் சின்னத்திரையில் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் செய்தி வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் சன் டிவி விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நடிகர்களுக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.
நடிகர் நடிகை திருமணம்:
தமிழ் சீரியல்கள் பல ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் சீரியலில் ஒன்றாக நடித்து அதன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நடிகர் நடிகைகளின் வரிசை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் பெரோஸ் கான் மற்றும் நடிகை ஏகவள்ளி தான் தற்போது புதிதாக திருமணம் முடிந்த ஜோடியாக இணையத்தை கலக்கி வருகின்றனர்.
மக்களே உஷார்… இந்த 9 மாவட்ட மக்கள் அடுத்த 3 மணி நேரம் கவனமா இருங்க – கனமழை அலர்ட்!
Exams Daily Mobile App Download
நடிகர் பெரோஸ் கான் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக உயிரே சீரியல், மகராசி, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட சில விஜய் டிவி சீரியல்களில் அவர் நடித்து இருக்கிறார். மேலும் நடிகை ஏகவள்ளி நிறைய சன் டிவி சீரியல்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக அவர் அன்பே வா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், நேற்று அவர்களுக்கு திருமணம் முடிந்துள்ளது. இந்த அழகான ஜோடிக்கு ஏகப்பட்ட சின்னத்திரை நடிகர் நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.