ரயிலில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் புத்தாண்டு சிறப்பு ரயில்கள்!
தமிழகத்தில் நாளை வரவுள்ள தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து பெங்களூர் பனஸ்வாடி ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிறப்பு ரயில்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி இருந்த காரணத்தால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக உள்ள தொழில்நுட்பங்கள் நிறுத்தப் பட்டது. அதில் முக்கிய ஒன்றாக ரயில்வே துறை உள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் ரயில் பயணம் இல்லாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்ததால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து வழி போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்திய ரயில்வே சார்பில் மக்களுக்கு சிறந்த பல சலுகைகளை செய்து வருகிறது. அதில் முக்கியமாக ரயில் முன்பதிவு திட்டம். இந்த திட்டம் மக்களுக்கு அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அதன் மூலம் மக்கள் தங்களுக்கு வேண்டிய தேதிகளில் வேண்டிய ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
வில்லன் ‘சிட்டி ரோபோ’ கெட்டப்பில் களம் இறங்கிய சிவாங்கி – குக் வித் கோமாளி ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த ரயில் சேவை தொடங்கி பழைய நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் நாளை வரவுள்ள தமிழ் திருநாள் விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து பெங்களூர் பனஸ்வாடி ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்க இருப்பதாக தென்மேற்கு ரயில்வே சார்பில் கூறியுள்ளனர். தற்போது அந்த ரயில் குறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.
இந்த ரயில் பெங்களூரு பனஸ்வாடி – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (07385) ஏப்ரல் 13 புதன்கிழமை இன்று பனஸ்வாடியிலிருந்து இரவு 08.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.45 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் திருநெல்வேலி – பனஸ்வாடி அதிவிரைவு சிறப்பு ரயில் (07386) திருநெல்வேலியிலிருந்து ஏப்ரல் 16 சனிக்கிழமை அன்று இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு பனஸ்வாடி சென்று சேரும் என்று தென்மேற்கு ரயில்வே கூறியுள்ளது.