தமிழக கோவில்களில் புத்தாண்டு வழிபாடு கிடையாது – கொரோனா பரவல் எதிரொலி!!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கோவில்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் புத்தாண்டு வழிபாடுகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாடு தடை
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கோவில்கள், மத வழிபாட்டு கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் 8 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு தினத்தன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.
TN Job “FB Group” Join Now
கொரோனாவால் கோவில்களில் இந்த ஆண்டு சிறப்பு வழிபாடு நடைபெறாது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கிறது. அன்று காலை 8.30 மணியளவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!!
அதே போல வடபழனி முருகன் கோவிலிலும் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடத்தப்பவுள்ளன. இந்த பூஜையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என கூறப்பட்டுள்ளது. தவிர கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் ஏப்ரல் 14ஆம் தேதி விஷூ பண்டிகையை தொடர்ந்து வழக்கமான பூஜை மட்டுமே நடத்தப்படுகிறது. அதே போல அய்யப்பன், குருவாயூரப்பன் கோவில்களிலும் சாமிக்கு கனி காணும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.