தமிழகத்தில் ஆக.9 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆக.9 வரை கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆக.9 வரை கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆக.9 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகப்பகுதிகளில் மேற்கு திசைக்காற்றின்‌ வேக மாறுபாடு காரணத்தால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்க கூடும் என்ற தகவலும், அதில் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை விடுப்பு பற்றியும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌

தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 5) மற்றும் ஆகஸ்ட் 6,7,8,9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

05.08.2022: நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம்‌, கள்ளக்குறிச்சி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

06.08.2022: நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய
வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதனால் நகரின்‌ ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.

05.08.2022: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மேலும், லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு
45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. அதை தொடர்ந்து மத்தியகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அக்னிபாத் திட்டம் 2022: ராணுவத்தில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – முழு விவரங்கள் வெளியீடு!

06.08.2022: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்,
மத்தியகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும், .
வடக்கு கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் வீசக்கூடும்‌.

07.08.2022, 08.08.2022: மன்னார்‌ வளைகுடா பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

09.08.2022: மன்னார்‌ வளைகுடா, மத்தியகிழக்கு மற்றும்‌ வடகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும், லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!