தமிழகத்தில் நாளை முதல் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை நேரங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழைப்பொழிவு இருந்து வருகிறது. சென்னையை பொறுத்த வரைக்கும் ஜூன் மாதத்தில் இருந்தே சில நாட்களாக மாலை நேரத்தில் பலத்த மழைப்பொழிவு இருந்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதன் பின்னர் கடந்த ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை பொழிந்தது. இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக மாலைநேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், குளிர்ந்த சூழலும் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, நாளை சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த வார இறுதியில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை சென்னையின் வடமேற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இனி வரும் நாட்களில் 50 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் ‘மஞ்சள்’ அலர்ட் எச்சரிக்கை – கனமழை எதிரொலி!
மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் பருவக்காற்றின் வேகம் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து காற்று வீசும் திசை மாறுபடும். அதாவது, காற்று வீசுவது மேற்கு திசையில் இருந்து வடமேற்கு திசையாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கடற்காற்று தாமதமாக வீசும் என்பதால் இனி வரும் நாட்களில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.