தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவ காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ சேலம்‌, கிருஷ்ணஒரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

14.09.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலை ஒட்டிய (திருப்பூர்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ சேலம்‌, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

15.09.2021: கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி) மாவட்டங்கள்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் போலீசாருக்கு பயண அட்டை, காவல்துறை ஆணையம் – முதல்வர் அறிக்கை!

16.09.2021, 17.09.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

நேற்று (12.09.2021) மாலை நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌இன்று (13.09.2021) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு ஒடிசா கடலோர பகுதியில்‌ நிலைகொண்டுள்ளது, இது மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்ககூடும்‌.

வங்கக்‌கடல்‌ பகுதிகள்‌:

13.09.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுததிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

13.09.2021: மத்திய மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

13.09.2021 முதல்‌ 17.09.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!